பாடசாலை திறப்பு கேள்விக்குறியாக?


நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் அடுத்தவாரம் 6ம் திகதி கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அறிவித்துள்ளபோதிலும், கத்தோலிக்க தனியார் பாடசாலைகளை  அடுத்தவாரமும் திறக்க வேண்டாமென, கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிவித்துள்ளார்.பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதனால் கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலைகளினை திறப்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

இதனிடையே வடக்கு நோக்கி 20 வாகனங்கள்வெடிபொருளுடன் வந்திருப்பதாக இலங்கை அரசு முன்னெடுத்துவரும் பிரச்சாரம் வடக்கில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.


No comments