தாக்குதலாளிகளை தெரியவில்லையென்கிறது காவல்துறை?

இலங்கை படையினர் மற்றும் பிக்குகளது வழிநடத்தலில் நடத்தப்பட்ட தாக்குதல் சூத்திதாரிகளை அடையாளம் காண முடியவில்லையென இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 12ஆம் திகதி முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும்  அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்ற நீதவான் ஜனனி எஸ். விஜேதுங்கவால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முறைபாட்டாளர்களால் சந்தேகநபர்கள் அடையாளங் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத 3 வெவ்வேறு முறைபாடுகள் தொடர்பில், சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு, இந்த மாதம் 30, 31, ஜூன் மாதம் 3ஆம் திகதி மீண்டும் சந்தேகநபர்களை முகத்தை மறைக்காமல் ஆஜர்படுத்துமாறு நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

No comments