நாட்டுப்பற்றாளர் நடேசனின் நினைவேந்தல் யாழில்!
நாட்டுப்பற்றாளர் நடேசனின் நினைவாக அவரது பேரன் மற்றும் மருமகன் சட்டதரணி சுகாஸ் மாலை அணிவித்து யாழில் இம்முறை அஞ்சலித்துள்ளனர்..
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.
யாழ்.நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அருகில் இந் நிகழ்வு நடைபெற்றது.
யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை மாலை 4.30 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது.
Post a Comment