மீண்டும் லங்காபுவத்?


இலங்கை அரசு தனது பொய்களை மெய்ப்பிக்க தனது முந்தைய லங்கா புவத் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஆயுத கண்டெடுப்பது செய்திகளைமுன்னெடுத்துவருகின்றது.
மாளிகாவத்தை கெத்தாராமை விளையாட்டரங்கிற்கு அருகாமையிலுள்ள பள்ளிவாயலின் அருகிலுள்ள கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆயுதங்களில் 46 வாள்கள், ரவைகள் அடங்கிய துப்பாக்கி ஒன்று, கத்திகள் உள்ளிட்டவை அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த ஆயதங்களுடன் ஐஸ் எனப்படும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த கிணற்றில் மேலும் ஆயுதங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் தொடர்ந்தும் சோதனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவைத்துள்ளனர்.

No comments