கமலஹாசன் மீது செருப்பு வீச்சு! மர்ம நபர் மடக்கி பிடிப்பு!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல்  பொதுக்கூட்ட மேடைக்கு வந்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீசிய நபர்களை மடக்கி பிடித்த கட்சியினர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர், விசாரணையின்போது அவர் பாஜக கட்சியை சார்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்ச்சே என்று கூறியதில் இருந்து கமல் மீது பாஜகவினர் கடும் ஆத்திரத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments