செத்து மிதக்கும் மீன்கள்?
மன்னார், விடத்தல்தீவு நாயாத்து வெளி நாயாறு பகுதியில் கடந்த சில தினங்களாக பல ஆயிரக் கணக்கான மீன்கள் இறந்து மிதந்து கொண்டிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தொடக்கம் குறித்த ஆற்றுக்குச் சற்றுத் தொலைவில் இறால் வளர்ப்புப் பண்ணை ஒன்றுக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் மீன்கள் உயிரிழப்புக்கு நீர் இறைப்பு காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.இந் நிலையில், அந்தப் பண்ணைக்கு நாயாற்றிலிருந்து நீரை எடுக்கும் நோக்கோடு வாய்க்கால்கள் வெட்டப்பட்டு குழாய் மூலம் நீரை இறைத்துள்ளனர்.
இது தொடர்பில் கரையோர பாதுகாப்புத் திணைக்களம், கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், மாந்தை மேற்கு பிரதேச செயலகம் உட்பட உரிய திணைக்களங்களுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது.’
மேலும் மன்னார் நீதிவான் நீதிமன்றுக்கும் குறித்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக விடத்தல்தீவு மேற்கு மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
Post a Comment