கேரளா சென்ற தீவிரவாதிகள்:விசாரணைக்கு அதிகாரிகள்!


இஸலாமிய பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று ஒரு மாதம் கடந்த பின்னராக விசாரணைகளை முன்னெடுக்க இந்தியா தனது விசாரணை குழுவை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாதத்  தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காகவே இந்தியாவிலுள்ள தேசிய விசாரணை முகவரான என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

இந்திய பொலிஸ் பிரதானி ஆலோக் மிதாலின் தலைமையிலான அதிகாரிகள் குழுவே இலங்கைக்கு வந்துள்ளனர்.

இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவுடன் தொடர்பைக் ​கொண்டிருந்தமைத்  தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.

இதனிடையே அண்மையில் 15 முஸலீம் தீவிரவாதிகள் கடல்வழியாக கேரளா தப்பி சென்றிருந்ததாக சொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments