தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

யாழ்.தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்திலிருந்து வெடிபொருட்கள், வயா்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா்.

குறித்த பகுதியில் இன்று சுன்னாகம் பொலிஸாா் மேற்கொண்டிருந்த தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டதாக கூறியுள்ள பொலிஸாா்,

9 மில்லி மீற்றா் துப்பாக்கி ரவை கூடு மற்றும் 5 தோட்டாக்கள், வயா்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளனா்.

No comments