பெண்ணிடம் தாலிக்கொடி அறுப்பு!

யாழ்.கச்சேரி - நல்லூர் வீதியால் சென்ற குடும்ப பெண்ணின் 13 பவுண் தாலிக்கொடியை இருவா் அறுத்து சென்றிருக்கின்றனா்.

ஆலயத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணிடம் தாலிக்கொடி அறுக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு கொள்ளையர்களால் தாலிக்கொடி இழுத்து அறுக்கப்பட்டதால்

கழுத்துப்பகுதியில் படுகாயமடைந்த பெண், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூர் – நாவலர் வீதியைச் சேர்ந்த சந்திரன் நிரஞ்சனா (வயது - 40) என்பவரே கழுத்துப் பகுதியில் நெரி காயத்துடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

யாழ்ப்பாணம் நல்லூர் மகா விஷ்ணு ஆலய கொடியேற்றத் திருவிழாவுக்குச் சென்று கச்சேரி – நல்லூர் வீதியால் இன்று பிற்பகல் வீடுதிரும்பிய அவரை பின்தொடர்ந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இடைமறித்து தாலிக்கொடியை அறுத்தெடுத்து தாலியுடன் கொண்டு சென்றுள்ளனர்

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments