யாழ் குருநகரில் வீடொன்று முற்றுகை


ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் யாழ்.குருநகா் பகுதியில் விசேட அதிரடிப்படையினா் வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனை நடாத்தியுள்ளனா்.

நேற்று இரவு 11 மணியளவில் குருநகர் கடற்கரை வீதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

மோப்ப நாய்கள் சகிதம் வீட்டினை சல்லடை போட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். எனினும் வீட்டுக்குள் எந்தவிதமான ஆயுதங்களும் மீட்கப்படவில்லை. எனினும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து கூரிய வாள் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வாள் தொடர்பில் விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments