பதற்றம்:பாடசாலைகள் மந்தம்!


ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர், இன்று ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பதற்ற நிலை தொடர்கின்றது.
கடந்த வாரம், 6ஆம் தரம் தொடக்கம், 13ஆம் தரம் வரையுள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதும், மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.
வடக்கு மாகாணத்தில் மாத்திரமே 60 வீதம் மாணவர்களின் வருகை பதிவாகியபோதும் மேல் மாகாணத்தில் மிகச் சொற்ப அளவு மாணவர்களே பாடசாலைகளுக்கு வருகை தந்திருந்தனர்.
இன்று பாடசாலைகள், அரச நிறுவனங்கள், பொதுமக்கள் கூடுகின்ற இடங்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆயினும்;, இன்று ஆரம்ப பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களது வரவு அங்கும் குறைவாகவே இருப்பதாக தெரியவருகின்றது.

No comments