மர்மப் பொதியால் பதற்றமடைந்த பொதுமக்கள்

கொழும்பு - கோட்டை - ரெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் கிடந்த மர்ம பொதியால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்திலேயே பொதி வைக்கப்பட்டிருந்தது.

பேருந்தொன்றில் சந்தேகத்திற்கிடமான பொதியொன்று காணப்படுவதாக பொதுமக்கள் காவற்துறைக்கு அறிவித்தைத் தொடர்ந்து குறித்த இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் மேற்படி பொதியை சோதனையிட்ட போது அதில் வெடி பொருட்கள் எதுவும் இருக்கவில்லை.

காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில்  பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்  பொதி வைத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியில் குறித்த பேருந்தை நிறுத்தி விட்டு சென்றமை குறித்து மேற்படி பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments