தற்கொலைதாரிகளுக்குச் சொந்தமான 140 மில்லியன் ரூபா மற்றும் 7 பில்லியன் ரூபா சொத்துக்கள் கண்டுபிடிப்பு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடாத்திய குண்டுதாரிகளுக்கு சொந்தமாக 140 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இச்சொத்துக்களை சிறீலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் மூலம் கண்டு பிடித்துள்ளது. குறித்த பணம் மற்றும் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

No comments