சர்வதேச விசாரணையை இந்தியாவே தடுக்கிறது - வரதராஜப்பெருமாள்

தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் சர்வதசே விசாரணையை இந்தியாவே தடுத்து வருகின்றது என்று ஒட்டுக்குழுத் தலைவரும் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

யாழ்ப்பணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக்கருத்தினை முன்வைத்துள்ளார்.

இலங்கை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதாகும்.

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறான ஒரு விசாரணையை இந்தியா விரும்பவில்லை. அதனை தடுக்கும் முயற்சிகளையே செய்து வருகிறது.

இந்திய அரசு தனது தேசிய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொள்கிறது என அவர் மேலும் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments