கிழக்குப் பல்லைக்கழத்தில் பட்டம் பெறும் 610 பேர்!

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 2019 ஆம் ஆண்டு 610 பேர் பட்டம் பெறவுள்ளனர். பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை வந்தாறுமூலை வளாகத்தில் நல்லையா கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

பட்டமளிப்பு விழா மூன்று கட்டங்களாக இடம்பெறவுள்ளது.

முதலாவது அமர்வில் 198 பேர், இரண்டாவது அமர்வில் 232 பேர், மூன்றாவது அமர்வில் 180 பேர் என, உள்வாரி மற்றும் வெளிவாரி மாணவர்களுக்கான பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.

இந்தப் பட்டமளிப்பு விழாவின் முதலாம் அமர்வு, காலை 8.30 மணிக்கும் இரண்டாவது அமர்வு, 11.30 மணிக்கும் மூன்றாவது அமர்வு, பிற்பகல் 2.30 மணிக்கும் நடைபெறவுள்ளன.

No comments