திருமலையில் விபத்து! இருவர் பலி! மூவர் படுகாயம்!

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி தம்பலகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

திருகோணமலையில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த சிறிய பாரவூர்தியும், கந்தளாயில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் தம்பலகாமம் 174 கட்டைப் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


No comments