கிழக்கு ஆளுநர் அலுவலகம் சுற்றிவளைப்பு! 40 ரவைகள் மீட்பு!

காத்தான்குடியிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது 40 துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டது. இதன்போது இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும் இச்சம்பவத்தை மறுத்து ஹிஸ்புல்லாஹ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமது பாதுகாப்புக்கு இருக்கும் காவல்துறை உத்தியோகத்தர்களின் பெட்டியில் இருந்தே 40 ரவைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தனது அலுவலகத்தில் இருந்து எந்தவித ஆயுதங்களும் மீட்கப்படவில்லையென தெரிவித்தார்.

காத்தான்குடியில் உள்ள எனது அரசியல் அலுவலகத்துக்கு பின்னால் உள்ள அறை ஒன்றில் எனது பாதுகாப்பு (எம்.எஸ்.டி ) உத்தியோகத்தர்கள் தங்குவது வழக்கம்.அவர்களின் பெட்டியில் இருந்த ரவைகள் பொலிஸின் அனுமதியுடன் கொண்டுவரப்பட்டவை.அமைச்சர் பாதுகாப்பு பிரிவிடம் இதற்கான அனுமதி ஆவணங்கள் உள்ளன.இப்போது எனது அலுவலர்கள் இருவர் விசாரிக்கப்படுகின்றனர். உருசிய ஆவணங்கள் கிடைத்தவுடன் பொலிஸார் அவர்களை விடுவிப்பார்கள் என்றார்.

No comments