தற்கொலைதாரிகளின் இறுதி காணொளி தயாரித்தவர் கைது!

இலங்கையில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய தற்கொலை தாரிகளின் சபதம் எடுக்கும் காணொளியை தயாரித்து இணையத்தில் பரப்பியவர் என்ற சந்தேகத்தில் தேசிய தௌஹீத் ஜமாய்த் அமைப்பின் ஊடக இணைப்பாளர் முகமட் லெப்பை  காத்தான்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்து முகமட் சர்ஹான் ஹாசீம் தலைவராக நீக்கப்பட்டதன் பின்னர் தலைவராக செயற்பட்டு வரும் முகமட் தௌவீக்,  தேசிய தௌஹீத் ஜமாய்தின் பொருளாளர் முகைதீன் பாபா முகமட் பைசர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதேவேளை அவர்கள் பயன்படுத்திய பல இலத்திரனியல் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.




No comments