எழுவர் விடுதலை! ராகுல் மௌனம் காப்பது ஏன்?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் கொலை வழக்கில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின், விடயத்தில் கேள்வி எழுப்பும் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழகம் - திருப்பூரில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

காங்கிரஸூடன் இணைந்து, திராவிட முன்னேற்ற கழகம் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றது. இதன் பொருட்டு இடம்பெற்று வரும் தேர்தல் பிரசாரங்களில் போது, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் நிலைமை குறித்து பிரசாரம் மேற்கொள்கிறார். எனினும் இதனை ராகுல் காந்தியோ அவரை சார்ந்தவர்களோ கண்டுக்கொள்வதில்லை.

தொடர்ந்தும் இந்த விடயத்தில் மௌனம் காப்பது, ஏமாற்று வேலைத்திட்டமே என சீமான் தெரிவித்துள்ளார். 

No comments