கிளிநொச்சியில் ஆறு முஸ்லிங்கள் படையிரால் கைது!

கிளிநொச்சியில் சந்தேகத்தின் பெயரில் ஆறு முஸ்லிங்கள் சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்படி ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வியாழக்கிழமை மாலை கைது செய்யபட்ட ஆறுபேரும் கிளிநொச்சி காவல் நிலையத்தில் படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் வியாபார நிலையங்கள் நடத்திவரும் நான்கு பேரும், கிளிநொச்சி ஏ 9 வீதியில் தும்பினி விகாரைக்கு அருகில் ஒருவரும், கனகாம்பிகைகுளம் பிரதேசத்தை சேர்ந்து ஒருவரும் என ஆறு  முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்கள் சில முஸ்லிம் அமைப்புகளுக்கும் இடையே தொடர்புகள் காணப்படுவதாகத் தெரிவித்தே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments