மைத்திரியின் ஒப்புதலிற்காக மரணதண்டனை?


இலங்கையில் மீணடும் மரண தண்டனை அமுல்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதன் பெயர் பட்டியல் மைத்திரி வசம் சென்றுள்ளது. 

நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து, போதைப்பொருள் வியாபாரத்துடன், தொடர்புடைய சிறைக்கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையெழுத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதைப்பொருள் வர்த்தகர்களின் விபரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல் ஒன்று சிறைச்சாலை திணைக்களத்தால் நீதியமைச்சுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நீதியமைச்சுக்கு அண்மையில் கையளிக்கப்பட்டுள்ள குறித்த பெயர்ப் பட்டியலில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு தமிழர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments