பிரதமர் அலுவலகத்தில் தீ! மாட்டிக்கொண்ட இம்ரான் கான்!

பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாகவும்  அப்போது  அதற்க்கு கீழ் மாடியில்  ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் இம்ரான் கான் மயிரிழையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து  வெளியிட்டுள்ள செய்தியில், “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிகாரிகளுடன்  ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது மேல் மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளதாகவும், மின் கசிவால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என கூறுகின்றனர்.


No comments