உலகப் பெயர்பெற்ற மலையேறும் வீரர்கள் மூவர் பலி!

கனடாவில் மலையேறும் வீரர்கள் மூவர் பனிப்பாறைச் சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.

உயிரிந்த மூவரும் உலகப் புகழ்பெற்ற மலை ஏறும் வீரர்களான ஜெஸ்ரோஸ்கெல்லி (36), ஹன்ஸ் ஜோர்ஜ் அயூயர் (35), டேவிட்லாமா (28) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஜெஸ்ரோஸ்கெல்லி அமெரிக்காவை சேர்ந்தவர். ஏனைய இருவரும்  ஆஸ்திரியாவை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவிலுள்ள அல்பெர்டா மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லையில் உள்ள பனி மலையில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இவர்கள் திடீரென காணாமல் போயுள்ளனர்.

மலையேறிய பகுதியில் பனிப்பாறை சரிவு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து மூவரும் பனிப்பாறை சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கனடா தேசிய பூங்கா நிறுவனம் அறிவித்துள்ளது.


No comments