குர்ஆன் வைத்திருந்த பிக்கு மக்களால் நையப்புடைப்பு!

மஹரகம தஹம் மாவத்தையில் குர்ஆன் ஒன்றை தம்வசம் வைத்திருந்த பிக்கு ஒருவரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிக்குவிடம் காணப்பட்ட சிங்கள மொழியிலான குர்ஆன் கீழே விழுந்​தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குறித்த பிக்கு அமைதியற்ற முறையில் நடந்துக்கொண்டுள்ளார்.

பிக்குவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தான் கண்டியிலுள்ள விகாரையில் இருப்பதாகவும், குர்ஆன் பற்றி ஆய்வு செய்வதற்காக இதனை சிங்கள மொழியில் தான் வைத்திருப்பதாகவும் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர் பிக்கு காவல்துறையினரால் விடுவித்துள்ளனர்.

No comments