தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு மக்கள் முன்னணி அஞ்சலி

ஈஸ்ரர் தினமான கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹேட்டல்களிலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இன்று பிற்பகல் 04 மணியளவில் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமை அலுவலகத்தில் நல்லூரி பிரதேச சபை உறுப்பினர் வாசுகி சுதாகரன் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அனைவரும் மொழுகுவர்த்திகள் ஏந்தி கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர உறுப்பினர் வ.பார்த்திபன், வடமராட்சி அமைப்பாளர் சித்திராதரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினர்.










No comments