சரவணபவனுக்கு வந்த சத்தியசோதனை!


தன்னை மதிக்க மறுத்த சிங்கள காவல்துறை அதிகாரியொருவர் தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றொரு சிங்கள அதிகாரியிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நேற்றைய தினம் மண்டைதீவு சென்றிருந்த ஈ.சரவணபவன் மக்களது காணிகள் சுவீகரிக்கப்படும் விடையம் தொடர்பில் பேச அங்கு வருகை தந்திருந்த ஊர்காவல்துறை காவல்துறை அத்தியட்சகரை அழைத்துள்ளார்.

ஆனால் சரவணபவனை ஒரு பொருட்டாக கூட கவனத்தில் கொள்ளாத அந்த காவல்துறை அதிகாரி நீதிமன்றம் செல்லவேண்டுமென தெரிவித்து வாகனத்திலிருந்த வாறு பதிலளித்துவிட்டு சென்றிருந்தார்.

இந்நிலையிலேயே தனக்கு மரியாதை தராத அதிகாரி தொடர்பில் சரவணபவன் புகாரிட்டுள்ளார். 

காணி ஆக்கிரமிப்பு விவகாரங்கள் தொடர்பில் ஜனாதிபதி ,பிரதமரென் பேச வேண்டிய கூட்டமைப்பினர் உள்ளுரில் சாதாரண காவல்துறை அதிகாரிகளிடம் பேசி என்ன செய்ய திட்டமிட்டிருந்தார்களென தெரியவில்லையென போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களோ சலித்துக்கொண்டனர்.

No comments