ஆமியைப் படம்பிடித்த கூட்டமைப்பு உறுப்பினருக்கு எச்சரிக்கை

யாழ்.கஸ்தூரியார் வீதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் நடாத்திய வீதி சோதனையினை அனுமதி பெறாமல் தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்த மாநாகரசபை உறுப்பினரை இராணுவம் கண்டித்து அனுப்பியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

யாழ்.கஸ்தூரியார் வீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைத்து வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர்.

அவ்வேளை வீதியால் வந்த யாழ்.மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் இராணுவத்தினர் வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தனது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் மற்றும் காணொளிகளை பதிவு செய்துள்ளார்.

அதனை அவதானித்த இராணுவத்தினர் உறுப்பினரின் தொலைபேசியினை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் அது குறித்து உறுப்பினரால் ஊடகவியலாளர்களுக்கு தெரியப்படுத்திய பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் , இராணுவத்தினருடன் பேசி சமரசப்படுத்தி கையடக்க தொலைபேசியினை பெற்றுக்கொடுத்தார்.

இராணுவத்தினர் கையடக்க தொலைபேசியினை உறுப்பினரிடம் கொடுக்கும் போது அவற்றில் இருந்த காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அழித்து விட்டே கையளித்துள்ளனர்.

No comments