மீண்டும் அரசியல் பரபரப்பில் கொழும்பு?


அடுத்து வரும் நாட்களில் கொழும்பு அரசியல் சூடுபிடிக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் மைத்திரிபால சிறிசேன இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் ஆலயத்துக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை திடீரென இரத்துச் செய்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டுக்குப் பின்னர், திருப்பதிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு; மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார். எனினும், அந்தப் பயணத்தை அவர் திடீரென நிறுத்தியிருப்பதாகவும், அவர் சிறிலங்காவிலேயே தங்கியிருப்பார் என்றும் அதிபருக்கு  நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
கொழும்பில் புதிய அரசியல் நகர்வு சூடுபிடித்துள்ள நிலையில் தனது அடுத்த கட்ட நகர்வில் மைத்திரி களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வகையில் மைத்திரி கொழும்பில் தங்கியிருப்பது அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

No comments