யாழ்-திருநெல்வேலியிலும் மின்னல் தாக்குதல்


யாழ்.மாநகர எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியதில் இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எாிந்துள்ளன. 

மணத்தறை வீதி சிவன்- அம்மன் கோவிலடியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திடீரென காற்றுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில், திடீரென மின்னல் தாக்கியுள்ளது.

இதனையடுத்து இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எாிந்துள்ளன. எனினும் எவருக்கும் எதுவித காயமும் ஏற்பட்டிருக்கவில்லை.

No comments