தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவெழச்சி நிகழ்வு-யேர்மனி!


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இலட்சியப் பயணத்திலே போரின் பக்கத் துணையாளர்களாய் வாழ்ந்து, பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு சம்பவங்களில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களை ஒருசேர நினைவிருத்தி வணக்கம் செலுத்தும், அன்னை பூபதி அவர்களின் 31ம் ஆண்டு நினைவு எழுச்சி நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக யேர்மனியின்  வூப்பெற்றால் பிராங்பேர்ட் ஆகிய இரு பெரு நகரங்களிலும் நடைபெற்றது.





பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றல், ஈகைச்சுடரேற்றல், மலர், சுடர் வணக்கம், அகவணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து, வணக்க நடனங்கள், கவிதைகள், வணக்க உரைகள், சிறப்புரை என்பனவும் இடம்பெற்றது.


நாட்டுப்பற்றாளரும், ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் 10 ம் ஆண்டு நினைவை முன்னிட்டு, அவரது நினைவு தாங்கிய ” நினைவுகளுடன் பேசுதல்” எனும் நூலின் அறிமுகமும், வெளியீடும் அரங்கில் இடம்பெற்றது.


சத்தியமூர்த்தியின் துணைவியார் திருமதி. நந்தினி சத்தியமூர்த்தி அவர்களும், அவரது மகள் செல்வி. சிந்து அவர்களும் இணைந்து நூலினை வெளியிட, பிரதிகளை மக்கள் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக தேசியக் கொடி இறக்கப்பட்டு, கோசப்பாடல் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவு பெற்றது. இதில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர்.

No comments