செல்வமும் மழுப்பலும்
அரசியல் பிரச்சினைகளை நாங்கள் கையில் எடுத்துச் செயற்படுகின்ற சூழலில் அலங்கார வளைவு உடைப்புச் சம்பவங்கள், மதங்களுக்கிடையிலான பிரச்சினைகளை இனப்பிரச்சினை என்ற முக்கிய பிரச்சினையை மறைக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னித் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
திருக்கேதீச்சரச் சம்பவம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு நேற்றுத் தெரிவித்ததாவது:
மன்னார் மாவட்டத்தில் இந்து மக்களும், கத்தோலிக்க மக்களும் இணைந்து செயற்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இடையிலே இணைந்து பூதாகா ரமாகச் செயற்படுகின்ற தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருக்கேதீச்சரத்தில் இடம்பெற்ற சம்பவம் மதங்களுக்கிடையில் பிரச்சினை களை உருவாக்குவது போன்ற நிலைப்பாடு தோன்றியுள்ளது.
இந்த வகையில் மதங்கள் மக்களை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். சட்ட ரீதியான சில செயற்பாடுகள் இருந்தும்கூட அது மறுக்கப்படுகின்ற பட்சத்திலே குறித்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும் இரண்டு பக்கங்களிலும் தவறுகள் காணப்பட்டாலும் கூட குறித்த தவறுகள் திருத்தப்பட வேண்டும்.
இனப்பிரச்சினை என்பது தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டும். எமது மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
திருக்கேதீச்சரச் சம்பவம் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு நேற்றுத் தெரிவித்ததாவது:
மன்னார் மாவட்டத்தில் இந்து மக்களும், கத்தோலிக்க மக்களும் இணைந்து செயற்பட்டு வாழ்ந்து வருகின்றனர். இடையிலே இணைந்து பூதாகா ரமாகச் செயற்படுகின்ற தன்மையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திருக்கேதீச்சரத்தில் இடம்பெற்ற சம்பவம் மதங்களுக்கிடையில் பிரச்சினை களை உருவாக்குவது போன்ற நிலைப்பாடு தோன்றியுள்ளது.
இந்த வகையில் மதங்கள் மக்களை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். சட்ட ரீதியான சில செயற்பாடுகள் இருந்தும்கூட அது மறுக்கப்படுகின்ற பட்சத்திலே குறித்த பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும் இரண்டு பக்கங்களிலும் தவறுகள் காணப்பட்டாலும் கூட குறித்த தவறுகள் திருத்தப்பட வேண்டும்.
இனப்பிரச்சினை என்பது தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைந்து செயற்படவேண்டும். எமது மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment