செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வு!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் – மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களின் வணக்க நிகழ்வு இன்று 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு வில்நெவ் சென்ஜோர்ஜ் பகுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பொதுச் சுடரினை 23.06.2000 நாகர்கோயில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் சாவடைந்த 2ம் லெப்.கானத்தரசி அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை செயற்பாட்டாளர் பவுஸ்ரின் அவர்களின் துணைவியார் ஏற்றிவைத்து மலர்மாலை அணிவித்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் சுடர் ஏற்றிவைத்து மலர் வணக்கம் செலுத்தினர்.

No comments