அடை மழை! 50 பேர் பலி!

இந்தோனேசியாவில் பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை இந்தோனேசியாவில் கிழக்கு மாகாணம் பபுவாவின் தலைநகரம் ஜெயபுரா அருகில் உள்ள சென்டானியிலேயே இம்மழை அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

கனமழையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் அப்பகுதி முழுவதுமே வெள்ளத்தில் மூழ்கியதுடன் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

இவ்வனர்த்தம் காரணமாக 42 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 21 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் தங்கவசதியின்றி உள்ளனர். மீட்ப்புப் பணிகளை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

No comments