பூநகரியை காப்பாற்ற சிவலிங்கம்?
தமிழ் வரலாற்றினை சொல்லும் பூநகரி மண்ணித்தலை சோழீச்சரத்தில் சைவ மகா சபையால் மிகக் குறுகிய காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஈழத்தின் மிக உயரமான மகாலிங்கம் (8 அடி) நேற்று சிவராத்திரி நிறுவப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கில் இந்து மக்கள் திரள சிவலிங்கத்திற்கான வழிபாட்டு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பூநகரியிலுள்ள மண்ணித்தலை சிவன் ஆலயம் மீள புனரமைப்பட்டுவருகின்ற நிலையில் தற்போது சிவலிங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சூறையாடப்படுகின்ற தமிழர் மண்ணினை இலக்கு வைத்து தற்போது சைவ மகா சபையினால் சிவலிங்கங்கள் தற்போது வேகமாக நிறுவப்பட்டுவருகின்றது.
ஏற்கனவே பொன்னாலை மற்றும் செம்மணியை தொடர்ந்து தற்போது பூநகரியிலும் சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.
பூநகரியை இலக்கு வைத்து தென்னிலங்கை வர்த்தகர்கள் காணிகளை கொள்வனவு செய்வதுடன் அங்கு விடுதிகளை அமைத்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment