கிழக்கிலும் பொங்கியெடுந்தனர் மக்கள்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசுக்கு மேலதிக கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் அனைத்துலக விசாரணையே வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப்பேரணியை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு செய்திருந்தனர். இன்று காலை கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரணி காந்திபூங்காவில் முடிவுற்றது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு கிழக்கில் பூரண வழமை மறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.






No comments