கரை சேர்ந்தார் கேப்டன்! 4தொகுதிகள் கிடைத்தது!

இந்திய பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11திகதி நடைபெறவுள்ளதென இந்திய தேர்தல் ஆணையம்  அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் இளுபறி நிலையில் இருந்த
 அதிமுக தேமுதிக கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் இரு கட்சிகள் இடையே கையெழுத்தாகியுள்ளது. அதிமுக, தேமுதிக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கூட்டணியாக போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளது என ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இருகட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். 
அதே வேளை 4 தொகுதிகள் தேமுதிக வுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

No comments