மட்டக்களப்பு ஆயர்: முன்னாள் முதலமைச்சர் சந்திப்பு!


வட  மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின்  செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்பை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக நாளை மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்தும் இதன்போது  கலந்துரையாடப்பட்டது.
மேலும் ஜெனீவா மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடியதுடன், கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் நெருக்கடிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.



No comments