ஜேவிபியுடன் கூடிக்குலாவிய கூட்டமைப்பு!


மே 2009 பின்னராக நல்லபிள்ளை வேடம் கட்டத்தொடங்கியுள்ள ஜேவிபி தற்போது கூட்டமைப்பு தம்மிடம் சரணடைந்துள்ளதாக கொண்டாடத்தொடங்கியுள்ளது.

இன்றைய தினம் ஜேவிபியினரை கூட்டமைப்பு சந்தித்த விடயத்தையே ஜேவிபி தனது பிரச்சார ஆயுதமாக்கியுள்ளது.

2009 இற்கு முன்னராக கூட்டமைப்பினரை புலிகளெனவும் இலங்கையினை பிரிக்க முற்படுவதாகவும் வசை பாடிய ஜேவிபி தலைவர்கள் தற்போது ஆனந்த கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்றைய தினம் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சி முறைமையினை நீக்குவது தொடர்பில் ஜேவிபியுடன் கூட்டமைப்பு கூடிப்பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments