குடும்பப் பிரச்சினையில் தலையீடு! கூட்டமைப்பு எம்.பியின் கொடும்பாவி எரிப்பு

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் சிறீநேசன் குடும்ப பிரச்சி னைகளிலும் தலையீடு செய்வதாக கூறி மட்டக்களப்பு- கிரான் மக்கள் இன்று கவயீா்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளதுடன்,

நாடாளுமன்ற உறுப்பினா் சிறீநேசனின் உருவ பொம்மையினையும் எாித்திருக்கி ன்றாா்கள். கிரான் பிரதேச இளைஞர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்  தில் மணல் அகழ்வில ஈடுபடும் தொழிலாளிகள்,

இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர். கண்டனப் பேரணியின் இறுதியில் நாடாளுமன்ற உறுப்பினரது பெயர் குறிக்கப்பட்ட உருவப் பொம்மை வீதியில் வைத்து ஆர்பாட்டாக்காரர்களால் எரியூட்டப்பட்டது.

மணல் அகழ்வு தொடர்பாக இரண்டு குடும்பங்களுக்கிடையில் ஏற்பட்ட தகராற்றை, நாடாளுமன்ற உறுப்பினர் தனது அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இரண்டு மணல் ஏற்றும் கூலித் தொழிலாளர்களை

நீதிமன்றம் வரை கொண்டு சென்றமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

No comments