விசா இன்றி தங்கியிருந்த இலங்கையர் இந்தியாவில் கைது!

இலங்கை கொழும்பு மட்ட குளி களனி கங்கை ரோடு சுந்தர்ராஜ் ரவீந்திர ராஜ் மகள் பிரதீபா, 31. பிளஸ் 2 படித்துள்ளார்.

 இலங்கையில் இருந்து விமானம் மூலம் 2017ல் மதுரை வந்துள்ளார்.

நாகபட்டினம்   கீழ்வேளூர் ஆந்தக் குடி அப்துல் காதர் மகன் சதாம் உசேன் 31 என்பவரை 2017 செப்.13ல் திருமணம் செய்து கொண்டு 15 நாள் நாகபட்டினத்தில் வசித்தார்.

பின்னர் அங்கிருந்து 2017 அக்டோபரில்  இலங்கை சென்று விட்டு மூன்று மாத சுற்றுலா விசாவில் 2017 நவம்பரில் வந்தவர் திரும்பி நாகை திரும்பியவர் மீண்டும் இலங்கை செல்லவில்லை.

சதாம் உசேன், பிரதீபா இருவரும் 2014 முதல் 2017 வரை சவுதியில் ஒரே வீட்டில் வேலை செய்தனர். அங்கு
இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

நாகபட்டினத்தில் இருந்து 2018 பிப்.22ல் 
ஏர்வாடி வந்து  தங்கினர்

இவருடைய விசா 2018 ஜன.3 ல் காலாவதியானது.

தற்போது இவரிடம் எந்த ஆவணம் இல்லாததால் அந்நியர் ஊடுருவல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏர்வாடி போலீசார் கைது செய்துள்ளனர்.

No comments