மக்களோ பட்டினியில்: கேக் சாப்பிட சொல்லுகின்றார் சித்தர்?


ஒருபுறம் மக்கள் பட்டினி சாவில் வாழ மறுபுறம் அன்றாட போக்குவரத்து வீதிகள் கண்டுகொள்ளப்படாது மிகமோசமாக இருக்க நான்கு கோடியில் கோவில் ஒன்றிற்கு நவீன காப்பற் வீதி அமைத்துக்கொடுக்கவுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்.

இணுவில் கந்தசுவாமி ஆலய சுற்று வீதிகளையே சுமார் நான்கு 4 கோடி ரூபா செலவில் காப்பற் வீதியாக அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரணிலிடம் பின்கதவு வழியாக கிராம எழுச்சி நிதியின் வழியே யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் விசேட நிதி ஒதுக்கீட்டில் மூலம் சுமார் நான்கு கோடி ரூபா செலவில் இணுவில் கந்தசுவாமி கோவில் வீதி  காப்பாற் வீதியாக அமைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் ஒதுக்கப்பட்ட நான்கு கோடி ரூபாவுக்கான அனுமதி யாழ்மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்டு குறித்த வீதிக்கான கேள்வி கோரல் மூலம் மாவட்ட செயலகத்தால் வீதி வேலைகளை செயவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து இன்று காலை வலிதெற்கு பிரதேச சபைத் தவிசாளர் க.தரசஷன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் வதனி, யாழ்மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர்,  வீதி ஒப்பந்தகாரர் ஆகியோரோடு இணுவில் கந்தசுவாமி ஆலய பகுதிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்  வீதி அளவீட்டுப் பணிகள் தொடர்பாக ஆராய்ந்ததோடு ஆலய நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடியுள்ளார்.

No comments