பெரும் சோகம்! 25 பேர் பலி!


மெக்சிக்கோ நாட்டில் அகதிகளை ஏற்றிக்கொண்டு பாரவூர்தி ஒன்று பயணித்துள்ளது. கிளபாஸ் மாநிலத்தின் சோயலோ என்ற இடத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பாரவூர்தி தடம்புரண்டு பள்ளத்தினுள் வீழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் அதில் பயணித்த அகதிகளில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப் பிரிவினர் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த அகதிகளை பளத்திலிருந்து மீட்டுள்ளனர். படுகாமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிற்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments