கமலுக்கு வெளிச்சம்! கிடைச்சது கூட்டணி!

நடிகர் கமலகாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது  செ.கு.தமிழரசன் தலைமையிலான இந்திய குடியரசு கட்சி இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை செ.கு.தமிழரசன் சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செ.கு.தமிழரசன்;

ஒரு பாராளுமன்ற  தொகுதியிலும், இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளில் மூன்றிலும் இந்திய குடியரசு கட்சி போட்டியிடுவதற்கு மக்கள் நீதி மையம் வாய்ப்பளித்துள்ளது.

தமிழகத்தில் மாற்று அரசியலுக்கு மாற்றுக் கட்சியாக மக்கள் நீதி மய்யத்தை தேர்ந் தெடுத்திருக்கிறோம். அதிமுக பாஜகவுடன் கூட்டு வைத்திருப்பதை நாங்கள் ஏற்கவில்லை.இதனால் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம்” என்றார்.


No comments