சுரேன் இராகவன் கதைக்க முடியாது: சுமந்திரன்!


இலங்கையினை ஜெனீவாவில் காப்பாற்ற தாங்கள் பாடுபடுகின்ற நிலையில் தேவையற்று எதனையும் கதைக்க கூடாதென வடக்கு ஆளுநர் சுரேன் இராகவனிற்கு எம்.ஏ.சுமந்திரன் எச்சித்துள்ளார்.

ஜெனீவா செல்லும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதியின் முகவராக மட்டுமே உரையாற்ற வேண்டுமென தெரிவித்துள்ளஅ அவர் அதனைவிடுத்து வடக்கு மக்களின் சார்ப்பாக எதனையும் பேசக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளது. அவர் வடக்கு மக்கள் சார்பில் பேசினால் அதற்கு உடனடியாக மாற்று நடவடிக்கை எடுக்க நேரிடும் என கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எச்சரித்துள்ளார்.

“வடக்கு ஆளுநர் ஜெனீவா செல்வது குறித்து எமது மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. அவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரல்ல. அவர் ஜனாதிபதியாலே நியமிக்கப்பட்ட ஜனாதிபதியின் முகவர். ஆகவே அவர் ஜனாதிபதியின் கூற்றுக்கு ஏற்றவாறே நடப்பார். இதனால்தான் மாகாண சபைகளுடைய முதலமைச்சர்களும் ஆளுநர்களின் அதிகாரங்களை முழுதாக நீக்கவேண்டும் என பரிந்துரை செய்துள்ளார்கள்.


இதனிடையே ஜனாதிபதியின் முகவர் வடக்கு மக்கள் சார்பிலே எதனையும் ஜெனீவாவில் பேசமுடியாது. அப்படி அவர் பேசுவாராக இருந்தால் அதற்கு மாற்று நடவடிக்கையை நாங்கள் எடுக்க நேரிடும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்;.

No comments