தலை துண்டானது! தாயின் வயிற்றுக்குள் உடல்!

தமிழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செல்லமுத்து மகள் பொம்மி என்ற பெண்ணுக்கு   கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில்  சுகப்பிரசவத்தின் போது குழந்தையை வெளியே எடுக்கும்போது தலை துண்டாகியது. குழந்தையின் உடல் தாயின் வயிற்றுக்குள் சிக்கிக் கொண்டதால்  தாதியர்கள் அதிர்ச்சியடைந்தனர். 
குழந்தையின் தாய் பொம்மி
இதனையடுத்து உடனே பொம்மியை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்த குழந்தையின் உடல் பகுதியை பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தாயின் வயிற்றில் இருந்து  மீட்கப்பட்டது. பிரசவத்தின் போது பாதிக்கப்பட்ட பொம்மிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments