பாதாள கோஷ்டியைச் சேர்ந்த நால்வர் கைது

பாதாள கோஷ்டியைச் சேர்ந்த நால்வர் ஹெரோயினுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை – ஹேக்கித்த பகுதியில்  விசேட அதிரடிப்படையினர் இன்று திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இறங்கினர். இதன்போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து 17 கிலோகிராம் ஹெரோயின், ஒரு கிலோகிராம் கொக்கைன் மற்றும் 1.5 கிலோகிராம் ஹஷீஸ் போதைப்பொருள் ஆகியவற்றுடன் மைக்ரோ ரக துப்பாக்கிகள் இரண்டும் 5 கைத்துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 15 போலி இலக்கத்தகடுகளும் ஒரு தொகை கைவிலங்குகளும் சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் விசேட அதிரிடிப்படை தெரிவித்தது.

No comments