மோடி வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி ஆர்ப்படடம் ! வைகோ கைது!

திருப்பூருக்கு வருகை தரும்இந்திய  பிரதமர் மோடியைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்திய வைகோ கைது செய்யப்பட்டார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நேரத்தில் தமிழகம் வராத பிரதமர் மோடி, தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகம் வருவதைக் கண்டித்து, திருப்பூரில் மதிமுக சார்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்தில் வைகோ கலந்து கொண்டு மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். இதனையடுத்து வைகோ உள்ளிடட கட்சி தொண்டர்களும்  கைது செய்யப்பட்டனர்.

No comments