தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யாது?


அதி­கா­ரப் பர­வ­லாக்­கல் என்­பது மக்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தாக இருக்க வேண்­டுமே அன்றிஅர­சி­யல்­வா­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அல்ல. இலங்­கை­யில் தமிழ் மக்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யும். ஆனால், தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யாது. அது­தான் எனக்கு ஏற்­பட்­டுள்ள பிரச்­சினை. இவ்­வாறு மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வுக்கு பய­ணம் மேற்­கொண்­டுள்ள மகிந்த ராஜ­பக்ச, பெங்­க­ளூ­ரில் ‘த ஹிந்து’ பத்­தி­ரி­கை­யால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மாநாட்­டில் நேற்­றுப் பங்­கேற்று உரை­யாற்­றி­னார். அவ­ரது உரை முடிந்த பின்­னர், தமிழ் மக்­க­ளுக்­கான அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் எழுப்­பப்­பட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

பெங்­க­ளூ­ரில் நடை­பெற்ற கருத்­த­ரங்­குக்கு இனப்­ப­டு­கொ­லை­யா­ளன் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தைக் கண்­டித்து மே 17 இயக்­கம் சார்­பில் நேற்­றுக் காலை ஆர்ப்­பாட்­டம் இடம்­பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.

No comments