திருடர்களின் கைவரிசை! சமையல் எண்ணெய்யைக்கூட விட்டு வைக்கவில்லை!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
தனிமையில் வாழும் பெண்ணொருவின் வீட்டை நோட்டம்விட்ட திருடர்கள் கூரையைப் பிரித்து வீட்டுக்குள் நுழைந்து தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
சமையல் அறையில் உள்ள பொருள்கள், பாத்திரங்கள், சமைக்கும் எண்ணெய், மற்றும் படுக்கையறையில் இருந்த புடவைகள், கட்டில், மெத்தை என ஒன்றையும் விட்டுவைக்காமல் திருடிச் சென்றுள்ளனர்.
போகும் போது திருடியது யார் என்று காவல்துறையினர் கண்டுபிடிக்காதவாறு தமது கையடையாளங்கள், கால் பட்ட இடங்களுக்கு மிளகாய்த் தூள் தூவிவிட்டுத் தப்பித்துள்ளனர்.
தனிமையில் வாழும் பெண்ணொருவின் வீட்டை நோட்டம்விட்ட திருடர்கள் கூரையைப் பிரித்து வீட்டுக்குள் நுழைந்து தங்களது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
சமையல் அறையில் உள்ள பொருள்கள், பாத்திரங்கள், சமைக்கும் எண்ணெய், மற்றும் படுக்கையறையில் இருந்த புடவைகள், கட்டில், மெத்தை என ஒன்றையும் விட்டுவைக்காமல் திருடிச் சென்றுள்ளனர்.
போகும் போது திருடியது யார் என்று காவல்துறையினர் கண்டுபிடிக்காதவாறு தமது கையடையாளங்கள், கால் பட்ட இடங்களுக்கு மிளகாய்த் தூள் தூவிவிட்டுத் தப்பித்துள்ளனர்.
Post a Comment