தண்ணீரே மிச்சம்?


இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று கிளிநொச்சி போலீசார் மற்றும் விசேட அதிரடி படையினர் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் செம்பியன்பற்று தெற்கு கிராம சேவகர் பிரிவில் ஆயுதக்கிடங்கு இருப்பதாக சந்தேகித்து  கனரக வாகனம மூலம் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப் பட்டபோது நல்ல தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அகழ்விடத்தில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் க.கனகேஸ்வரன் ,கனிய வளங்கள் மற்றும் புவிச் சரிதவியல் திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர் ,தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ,வன வள திணைக்கள அதிகாரிகள் முன்னிலையிலேயே இவ் ஆயுத கிடங்கு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடம் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

வேறு வேலை வெட்டியில்லாமல் அதிகாரிகள் மணித்தியாலக்கணக்கில் காத்திருந்தனர்.

ஆயுதக் களஞ்சியம் இருப்பதாக பளைப் பொலிஸார் மற்றும் அதிரடிப்படை அகழ்வுப் பணியில் ஈடுபட்ட வேளை ஒரு கட்டத்தில் இதற்குள் ஒன்றும் இல்லை என்றாகிப் போயிருந்தது.

எனினும் அகழப்பட்ட பகுதியில் நன்னீர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments